வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2022

 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 28

 

கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், பத்திரிகையாளர், மக்கள் நலம் நாடும் அரசியலியளாளர் (இங்கே அரசியல்வாதி என்கிற வார்த்தை கொச்சையாகிப் போனதால் அரசியலியளாளர் என்கிற புதிய பதம்) எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் தோழர் த.இந்திரஜித் அவர்கள்.

'வர்க்கப்போராளியின் வரலாற்றுச் சுவடுகள்' 'செவலக்காளை' (சிறுகதை) 'வெளிச்சத்தை நோக்கி' (கவிதை) 'காந்திவேடமிடும் கோட்சேக்கள்', 'வல்லரசின் அக்னிச்சாட்டை'  (கட்டுரை) எனப் பல்தள எழுத்தாளர்.

ஆரம்பத்தில் தினகரன் பத்திரிகையில் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றிப் பின்னர் இந்திய பொதுவுடைமை கட்சியின் (சிபிஅய்)அதிகாரப்பூர்வ அரசியல் நாளேடான 'ஜனசக்தி' நாளிதழின் பொறுப்பாசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய சிறப்புடையவர்.

'செவலக்காளை' சிறுகதை நூலில் உள்ள 'சுமை' என்கிற கதை கொங்கு கல்லூரியில் பாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செவலக்காளை நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எம்.ஏ, எல்.எல்.பி பட்டம் பெற்று, இலக்கியம், அரசியல் என இரண்டு தளங்களிலும் பயணிக்கும் தோழரின் மக்கள் பயணம் சிறக்க வாழ்த்துவோம்.



கருத்துகள் இல்லை: