மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 30
கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், சிற்றிதழாளர் எனப் பன்முக ஆற்றலுடையவர்
திரு. இதயா ஏசுராஜ் அவர்கள். கோவையில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பாதுகாவலராகப் பணி புரிபவர்.
இவரது முதல் சிறுகதை 'நேசமுள்ள நெஞ்சங்கள்' தஞ்சையிலிருந்து வெளிவந்த 'வேளாங்கண்ணி குரலொலி' என்ற சிற்றிதழில் வெளிவந்தது.
தொடர்ந்து பாக்யா, தினத்தந்தி, தினபூமி, மாலை
மலர், கல்கி என வணிக இதழ்களில் நூற்றுக்கு
மேற்பட்ட கதைகளும், ஐம்பதுக்கும் அதிகமான கவிதைகளும்
எழுதியுள்ளார்.
'வருகைக்கான ஆயத்தங்கள்' இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு (2018).
'பயணிகள்
உலவும் காகிதக்காடு' இவரின் முதல் நாவல் (2019). 'இல்லம் சொர்க்கமாக' நூல் முதல் 'தமிழ் சினிமாவின் வரலாறு' நூல்வரை 12 கட்டுரை நூல்கள் வெளி வந்துள்ளன.
'விழி', 'திருவிழா' என்கிற இரண்டு சிற்றிதழ்களை நடத்திய அனுபவமுள்ளவர்.
'நம் உரத்த சிந்தனை விருது' 'சென்னை வானதி விருது' 'கலை இலக்கியப் பெருமன்ற விருது' போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், நாவலும் வர இருக்கின்றன. அவைகளோடு மேலும் மேலுமாய்த் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க, திரு. இதயா ஏசுராஜ் அவர்களை மனதார வாழ்த்துவோம்.





















