வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2022

 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 27


இளம் எழுத்தாளர், சமூக ஆர்வலர் செல்வி கீர்த்தனா அவர்கள்.

யோகா ஆசிரியரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி.

இளம் வயதிலேயே தனது தந்தை செய்யும் யோகா பயிற்சியினைப் பார்த்து தானும் யோகா பயிற்சி செய்து அதை நூலாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில், 'யோகா' 'எளிய உடற்பயிற்சி', 'சூரிய நமஸ்காரம்', உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிகாம் எல்எல்பி ஹானர்ஸ் சட்டப்படிப்பினைப் படித்து வருபவர். தனது தாய், தந்தையுடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே எழுத வந்திருக்கும் செல்வி கீர்த்தனா அவர்களின் எழுத்தாற்றல் சிறக்க வாழ்த்துகள்.






கருத்துகள் இல்லை: