நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நாவலாசிரியர், குறும்பட நடிகர் என வியக்கத்தகு எழுத்தாளர் திரு. க. முருகேசன் அவர்கள். துறையூர் பயணியர் மாளிகை அருகில் வாழைப்பழக்கடை வைத்துள்ளார். இவர் சொந்த ஊர் ஒக்கரை. பதினோராம் வகுப்பு வரை படித்துள்ளார்.
1980ல் 'நீலா' என்ற பகுத்தறிவுச் சிந்தனை நாடகம், 1982ல் 'உரிமை கீதம்' என்ற நாடகம், 1984ல் 'கண்ணீரே கதை' என்ற நாடகம் என்பன இவரது நாடக ஆக்கங்கள்.
'உண்மை' என்கிற பகுத்தறிவு இதழில் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகள், 'மானுடம்' இதழில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இவரை நாயகனாக வைத்து திரு. சுரேஷ் ஆறுமுகம் அவர்கள் இயக்கிய, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறும்படம் 'பழக்கடை முருகேசன்' புகழ்பெற்ற திரை இயக்குனர்களின் பாராட்டைப் பெற்றது.
இவர் 2010ல் எழுதிய 'செங்குருதி' நாவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள முத்தமிழ் கலை பண்பாட்டு மையத்தின் முதல் பரிசைப் பெற்றுள்ளது. 2012ல் 'பச்சைமலைக் குயில்' சிறுகதைத் தொகுப்பு கார்முகிலோன் நினைவு பரிசு பெற்றது. 2017-2018ல் 'மாண்புரு மனிதர்கள்' நாவல் தமிழ்நாடு அரசு ஆதி திராவிட நல வாரியத்தில் இயங்கும் கலை பண்பாட்டு மையத்தின் முதல் பரிசினைப் பெற்றது. 2022ல் திருச்சி புத்தகக் கண்காட்சியில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
'தன்மானத் தளபதி', 'நேற்று இன்று' என்கிற இரண்டு நாவல்கள் விரைவில் வெளியிடும் நிலையில் உள்ளது. துறையூர் திரு. க. முருகேசன் அவர்களின் நாவல்கள் விரைவில் வெளிவந்து தடம் பதிக்க வாழ்த்துவோம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக