மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 25
"நான்
சமரசமற்ற நாத்திகன். பொதுவுடைமைச் சிந்தனையன்.
மனித வாசிப்பு மனித நேசிப்பு
சுகமானது" என்பதென் கோட்பாடு.
"என்
எழுத்துகள்
உங்களுக்கானவை.
இதுவே என் நற்செய்தி"
என்பதென் பிரகடனம்.
"காற்றே இனிக் காகிதம்.
நம் ஆயுதம்"
என்பதென் வியூகம்.
ஒரு தாவரம், தன் திரட்சி தாங்காது பிஞ்சிறக்குவது போலத்தான் இலக்கியம் பிறப்பதும்!
"இருதரப்புக்கும் இலாபம் கிடைக்கும் அனுபவங்களுள் கலவி ஒன்று.
கதை மற்றொன்று"
என்கிறான் எனக்குள் ஒருவன்.
"எழுதுவது என் சமூகக் கடமை" எனும் பொறுப்புணர்ந்து இயங்குகிறேன் என்று தம்மை வித்தியாசமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர் திரு. அறிவுச்செல்வன் அவர்கள். மணப்பாறையைச் சேர்ந்தவர்.
இவர் இதுவரை
1. சொட்டக்காரன்
கதை 2. மூளை
மழை 3. காடுகள்...
கூடுகள்... வீதிகள்... வெளிகள்... 4. தொழுகையைவிடத் தூக்கம் மேலானது 5. நானும் நாமும் என ஐந்து கவிதை நூல்களும், 6. சொக்கம்பட்டிச் சாக்ரடீஸ் 7. சைக்கிள் சுனாமி 8. நிறைசூலி 9. முன்கதைச் 'சுருக்' 10. சூழல்கைப் பாவைகள் என
ஐந்து சிறுகதைத் தொகுதிகளும், 11. கூரின கூறு 12. ராவாயி 13. அப்பாவின் மகள்களும் அம்மாவின் மகன்களும் என மூன்று கட்டுரைத் தொகுதிகளுமாக மொத்தம்
பதின்மூன்று நூல்கள் எழுதியிருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் இப் பதின்மூன்று நூல்களையும் கடந்த 1-5-22 மேதினத்தன்று மணப்பாறையில் ஒரே மேடையில் ஒருசேர வெளியிட்டதுதான்.
திரு. அறிவுச்செல்வன் அவர்களின் இது போன்ற தனித்துவம் மிகுந்த செயல்களுக்கு நமது வாழ்த்துகளைக் கூறுவோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக