மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 26
கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தனிநகைச்சுவைச் சொற்பொழிவாளர் திரு. ப. சங்கரன் அவர்கள்.
இவரது கவிதை நூல் 'காக்கா முட்டை'.
காவேரி எழுத்தாளர் களஞ்சியம் என்கிற அமைப்பின் நிறுவனர். பாரத மிகு மின் நிறுவனத்தின் முத்தமிழ் மன்ற வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.
ஐநூறுக்கு மேற்பட்ட அவைகளில் கவியரங்கம், பட்டிமன்றம், தனிநகைச்சுவைச் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவரது மிகு திறன்களில் ஒன்று நகைச்சுவையுடன் கூடிய மேடைப் பேச்சு.
கவிதை, கட்டுரை, பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள், நினைவுப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
மேலும் மேலுமாய் சிறக்க நமது நல் வாழ்த்துகள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக