வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 4 ஜூன், 2011



ஆசிய துணைக்கண்டத்தில் ஆயுதப் போட்டி


கௌதம் தத்

தமிழில் - சு அழகேஸ்வரன்

          2009ம் வருடம் மூன்று ரஷ்ய - இஸ்ரேலிய உளவு விமானங்கள் புதுதில்லிக்கு வந்தவுடன் இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக பாகிஸ்தானைவிட பலமான நிலைக்குச் சென்று விட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் இன்று பாகிஸ்தான் இந்திய எல்லைகளை ஊடுருவித் தாக்கக் கூடிய திறன் பெற்ற சீனாவின் விமானங்களை தனது படையில் சேர்த்துக் கொண்டுள்ளதால் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட இடைவெளியை இட்டு நிரப்பி முன்னேறிய நிலைக்குச் சென்று விட்டதாக அறிய முடிகிறது.

   இதை எதிர்கொள்ள இந்தியா “வானத்தின் கண்” என்று அழைக்கப்படுகின்ற வான்தாக்குதல்களை முன்கூட்டி அறியும் மற்றும் கட்டுப்படுத்தும் முறையை (Air borne early warning and control system AEW&C) அதிகப்படியாக வாங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களின் தாக்குதல்களை முன்கூட்டி கண்டறிந்து எதிர்கொள்ள முடியும் என்று தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

          முன்னதாக 1.1பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மூன்று இஸ்ரேலிய ஃபால்கன்களை (Phalcon) வாங்கியதன் மூலம் உலக அளவில் இந்தியா மிகச் சிறந்த வான்வழி கண்காணிப்புத்திறனைப் பெற்றுள்ளது. இந்த ஃபால்கான்களை ரஷ்ய நாட்டின் Modified Transporter 1L – 76ல் பொருத்துவதின் மூலம் அவை வான் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் விரைவான தேடுதல் வசதியுடன் விரிவான பகுதிகளைப் பாதுகாப்பதற்கான திறனைப் பெற்றுவிட்டோம் என்றும் இந்திய அதிகாரிகள் வாதிட்டார்கள். ஆனால் ரஷ்யாவின் 1டு -76 ட்ரான்ஸ்போட்டா விமானத்தில் இஸ்ரேலிய ஃபால்கன் ரேடார்களை இந்தியா பொருத்தியுள்ளது போல் பாகிஸ்தான் சீனாவுடைய ZDK – 03 என்ற பெரிய விமானத்தில் பொருத்தக்கூடிய சுவீடன் நாட்டு Swedish Erieye system தனது படையில்  சேர்த்துள்ளதின் மூலம் மேற்கண்ட தொழில்நுட்ப இடைவெளிகளை இட்டு நிரப்பியுள்ளதாக இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

          சிறிய ஒரு நாட்டிற்குப் பெரியதொரு எண்ணிக்கையாகப் பத்துக்கும் மேற்பட்ட இம்மாதிரி போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

          இது இந்தியா தொடர்ச்சியாக Phalconகளை வாங்கிவருவதன் மூலம் துணைக்கண்டத்தில் இது ஓர் ஆயுதப்போட்டி ஏற்பட வழிவகுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ள வான் தாக்குதல் கண்காணிப்புக் கருவியை எல்லோரும் தற்போது எதிர்பார்த்துள்ளார்கள். இந்த தயாரிப்பானது பிரேசில் நாட்டின் எம்ப்ரேயா - இ.எம்.பி - 145 (EMBRAER –EMB 145) விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. இது இந்தியாவின் வான்படைத் தாக்குதல் திறனுக்கு பலமான அடித்தளத்தை உருவாக்க வல்லமை பெற்றது.

          இந்தியா சோதனை ஓட்டத்தை நடத்த உள்ள இந்த நிலையில் பாகிஸ்தான் ரிவர்ஸ் எஞ்சினியரிங் முறையில் சீனாவால் உருவாக்கப்பட்டுள்ள ZDK – 03 விமானங்கள் நான்கில் ஒன்றை தனது படையில் சேர்க்க உள்ளது. பாகிஸ்தான் சுவீடன் நாட்டிலிருந்து மூன்று எரிஐயை (Eri eye) ஏற்கனவே வாங்கியுள்ளது.

          பிரேசில் கிரீஸ் மற்றும் மெக்சிக்கோ நாடுகள் போல பாகிஸ்தானும் தனது இயக்க மையங்களுடன் எரிஐ களை தரை வழியாக இணைத்துள்ளது (Connected by Eri eye interface segment) என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். பிரேசில் நாட்டு வல்லுநர் ஸொயோ ரிகார்டோ எக்ஸ்பிரஸ் நாளிதழ்களிடம் இஸ்ரேலிய AWE&C ஸிஸ்டம் மிகவும் மேம்பட்டதாகையில் இந்தியா எப்பொழுதும் முன் நிற்கிறது என்ற போதிலும் பிறரும் வேகமாக தொடர்கிறார்கள் என்று கூறினார். இஸ்ரேல் அமெரிக்காவின் நிர்பந்தத்தின் காரணமாக ஃபால்கான்களை சீனாவிற்கு அளிக்க மறுத்து வருகிறது என்றும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

(“இது கடந்த 30.01.2011 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேட்டில் திரு. கௌதம் தத் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்”)




கருத்துகள் இல்லை: