
தமிழ்நாட்டை மஞ்சள் துண்டு மகான் கருணாதியின் குடும்பமே கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பேரன்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது திரைப்படத் துறையும், திரைப்பட வெளியீடும், காட்சியிடத் திரையரங்கும்.
வணிக ரீதியிலான சிறிய மூலதனத் திரைப்படங்கள் கூட திரையிடத் திணறும் இந்தச் சூழலில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வெளியீடான பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தைத் திரையிட எந்தத் திரை வணிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முன் வருவதில்லை.
இந்தச் சூழலில் முற்போக்கு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு நகரிலும் அம்பேத்கர் திரைப்படத்தைத் திரையிட முன்முயற்சி எடுத்து தோழர்கள் திரையிட்டும் வருகிறார்கள்.
அதன் வரிசையில் திருச்சி மாநகரிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன் கையெடுப்பில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சமூக சிந்தனை உயிர்ப்பியக்கம், சிஐடியு மற்றும் வங்கி, காப்பீடு ஊழியர்கள் சங்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது,
திருச்சி மாநகரில் 'மெகா ஸ்டார்' திரையரங்கில் எதிர் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் இரவுக் காட்சியும் (இரவு 8.00 மணி), 16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு என பகல் காட்சியும் திரையிடப்படவுள்ளது. திருச்சி மாநகர மக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
தோழமையுள்ள........
பாட்டாளி
மாநில பொதுச் செயலாளர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக